Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

தேசிய அளவில் பதக்கம் வென்ற தடகள வீரர், வீராங்கனைகள் பகுதி நேர பயிற்சியாளராக சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.


தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல் தருமபுரி மாவட்டத்தை சார்ந்த தேசிய அளவில் பதக்கம் வென்ற தடகள வீரர், வீராங்கனைகள் விளையாடு இந்தியா மாவட்ட மையத்தில் பகுதி நேர பயிற்சியாளராக சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாடு இந்தியா (கேலோ இந்தியா) திட்ட நிதியுதவியில் துவக்கநிலை தடகள பயிற்சிக்கான விளையாடு இந்தியா மாவட்ட மையம் தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கத்தில் அமைக்கப்படவுள்ளது.

இம்மையத்தில் 30-100 விளையாட்டு வீரர் வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட தேசிய அளவில் சாதனை படைத்த 40 வயதிற்குட்பட்ட தடகள வீரர், வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்கள். விண்ணப்பதாரர் குறைந்தது ஐந்து ஆண்டுகளாகவும், தற்போது தருமபுரி மாவட்டத்தில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும். சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ, சர்வதேசப் போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும்.


தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சி கட்டணமாக ரூ.18,000/- வழங்கப்படும். இது நிரந்தப்பணி அல்ல. முற்றிலும் தற்காலிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ நிரந்தரப் பணியோ பெற இயலாது. இதற்குரிய விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் www.sdat.tn.gov.in வருகின்ற 03.01.2023 மாலை 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம். பிற வழிகளில் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்பட மாட்டாது. 


தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு தருமபுரி மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறும். இத்தேர்வு உடற்தகுதி, விளையாட்டுத்திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நடைபெறும்.  எனவே தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த தகுதி வாய்ந்த பயிற்றுநர்கள் விண்ணப்பிக்கலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884