எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்திய OPS அணி அதிமுகவினர். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 நவம்பர், 2022

எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையை செலுத்திய OPS அணி அதிமுகவினர்.

தர்மபுரி மாவட்டத்தில் கிழக்கு மாவட்ட அதிமுக ஒன்றிய நகர பேரூர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள், அதிமுக ஒருங்கிணைப்பாளர், பொருளாளர், முன்னாள் முதலமைச்சர். ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, அரூர் நான்கு ரோட்டில்  மேளதாளங்களுடன் பேரணியாக சென்று அரூர் பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு ஒன்றிய செயலாளர்கள் சிவலிங்கம், வஜ்ஜிரம், தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


இதில் புதிய மாவட்ட மகளிர் அணிசெயலாளர் காவேரி, மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண் பாசறை செயலாளர் டாக்டர் எஸ்.ஆர்.வி. சதீஷ்குமார், அரூர் பேரூர் கழக செயலாளர் ஏ. உமாபதி, மொரப்பூர் ஒன்றிய கழக செயலாளர் சி.சாமிநாதன், கம்பைநல்லூர் பேரூராட்சி கழக செயலாளர் ஏ. சந்தோஷ், அரூர் தொகுதி அமைப்பாளர் ஆர். கோவிந்தசாமி, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அமைப்பாளர் பி. கர்ணன், கடத்தூர் ஒன்றிய கழக செயலாளர் ஆர். சிவப்பிரகாசம், கடத்தூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் எழிலரசன், கடத்தூர் பேரூராட்சி கழக செயலாளர் எம். துரை, பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் பன்னீர்செல்வம், பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் எம். இளையராஜா, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பொன். நேதாஜி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ப. கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் எம்.இ.உஸ்மான், அரிராஜன், சிவபெருமாள், சிவசெந்தில், சக்திவேல், மனோகரன், மோகன், முக்குலத்தோர் படை மாவட்ட செயலாளர் ரமேஷ், மாவட்ட தலைவர் சரவணன், சிவசக்தி, கார்த்திக், சிவகுமார், நிர்மல், வெங்கடாசலம், மற்றும் அதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.