இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் கலந்து கொண்டு மினி மாரத்தான் ஓட்டப் போட்டியினை கொடியசைத்து தொடங்கி வைத்து, மினி மராத்தான் போட்டியில் தானும் பங்கேற்றார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வெ.தீபனாவிஸ்வேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மரு.சவுண்டம்மாள் ஆகியோரும் மினி மராத்தான் ஓட்டப் போட்டியில் பங்கேற்றார்கள்.
தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறை துவங்கப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் முதல் பகுதியாக, நமது தருமபுரி மாவட்டத்தில் நூற்றாண்டு விழா ஜோதி கடந்த 21.10.2022 அன்று வரப்பெற்று மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அன்றைய தினம் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழச்சியில் தருமபுரி மாவட்டத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பொது சுகாதாரத் துறையில் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு நினைவுப் பரிசுகளும், மேலும் தருமபுரி மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறையில் சிறப்பாக பணியாற்றிவருபவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்களால் வழங்கப்பட்டது.
இந்நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின் தொடர்ச்சியாக இன்றைய தினம் (27.11.2022) மினி மராத்தான் ஓட்டப் போட்டி நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், தருமபுரி நகராட்சிக்குட்பட்ட தருமபுரி - கிருஷ்ணகிரி தேசியநெடுஞ்சாலையில் உள்ள இராமாக்காள் ஏரி அருகில் தொடங்கிய மினி மராத்தான் ஓட்டப் போட்டி தருமபுரி நான்கு சாலை சந்திப்பு, அரசு தருமபுரி மருத்துக் கல்லூரி மருத்துவமனை சாலை, பாரதிபுரம், இலக்கியம்பட்டி வழியாக தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற மினி மராத்தான் ஓட்டப் போட்டியில் அரசு அலுவலர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என 1000-த்திற்கும் கலந்து கொண்டார்கள்.
இம்மினி மராத்தான் ஓட்டப் போட்டியில் பங்கேற்றவர்களின் திரு.அ.திருப்பதி அவர்கள் முதல் இடமும், திரு.எம்.ராமதாஸ் அவர்கள் 2 -ஆம் இடமும், திரு.பெ.ஏழுமலை அவர்கள் 3 -ஆம் இடமும் பெற்றனர். மேலும் திரு.எஸ்.பூமணி அவர்கள் அவர்கள் 4 -ஆம் இடமும் திரு.எ.பெருமாள் அவர்கள் 5 -ஆம் இடமும், திரு.தி.பகவத்விஷ்ணு அவர்கள் 6 -ஆம் இடமும், திரு.எஸ்.தங்கதுரை அவர்கள் 7-ஆம் இடமும், திரு.எஸ்.நிரஞ்சன் அவர்கள் 8-ஆம் இடமும், மரு.சி.வெங்கடாசலம் அவர்கள் 9 -ஆம் இடமும் மற்றும் திரு.கே.கிஷோர் அவர்கள் 10 -ஆம் இடமும் பெற்றனர்.
இம்மினி மராத்தான் ஓட்டப் போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள். மேலும் இம்மினி மராத்தான் ஓட்டப் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இம்மினி மராத்தான் ஓட்டப் போட்டியில் தருமபுரி வருவாய் வட்டாட்சியர் திரு.தன.ராஜராஜன் உட்பட துறை அலுவலர்கள், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மருத்துவர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக