அரூர் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் இந்திய அரசியலமைப்பு தினம் இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 27 நவம்பர், 2022

அரூர் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் இந்திய அரசியலமைப்பு தினம் இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.


அரூர் சரக காவல் துணைக்கண்காணிப்பாளர் திரு. புகழேந்தி கணேஷ் அவர்கள் தலைமையேற்று விழா சிறப்புரையாற்றினார். அதன்பின் அவரின் முன்னிலையில் அனைவரும் இணைந்து இந்திய அரசியலமைப்பின் முகப்புரையை இணைந்து வாசித்து அதன் மகத்துவத்தை காப்போம் என்றும் அதன் மதிப்பீடுகள்படி நடப்போம் என்றும் உறுதியேற்றனர். 

விழாவில் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை பொறுப்பாளர்கள் திரு. வசந்த், திரு. விஜயன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் திரு. வேடியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். 


அரசியலமைப்பின் தந்தை அண்ணல் டாக்டர். அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. விழாவில் அரசியலமைப்பு சாசனம் உணர்த்தும் சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகிய மதிப்பீடுகளை முன்னிறுத்தி அரசியலமைப்பு உரிமை மன்ற மாணவ மாணவிகளின் நடனம், நாடகம் மற்றும் பாடல்கள் இடம் பெற்றன. 


இவ்விழாவை புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, புனித அன்னாள் தொடக்கப்பள்ளி, புனித அன்னாள் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிகள் ஆகியவற்றோடு லிப்ட் மையம் மற்றும் ஆக்சன் எயிட் ( ACTION AID) அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. 


பள்ளியின் தாளாளர் அருட்தந்தை. ஆல்பர்ட் ஜோசப், தலைமையாசிரியர் அருட்தந்தை. பால் பெனடிக்ட், லிப்ட் மைய இயக்குனர் அருட்தந்தை. ஜேம்ஸ் ஆகியோர் முன்னிலையில், உதவித் தலைமையாசிரியர் திரு. செல்வராஜ், ஆசிரியர்கள் திரு. பால் பிரிட்டோ, திரு. தீர்த்தகிரி, திரு. விஜய், திரு. ஆரோக்கியதாஸ், திரு. முத்து, அருட்சகோதரர். ரெக்ஸ் அந்தோணி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.