Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பொம்மிடியில் கடன் தொல்லையால் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.

தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் உள்ள விஜயநகர் பகுதியை சார்ந்தவர் விவசாயி தேவன் இவரது மகன் செல்வராஜ் வயது 30 இவருக்கு திருமணமாகி  நதிய மேரி என்ற மனைவியும், ஒரு ஆண், ஒரு பெண் என இரு குழந்தைகளும் உள்ளனர்.

இவர் சமீப காலமாக கடன் தொல்லையால் இருந்ததாக கூறப்படுகிறது, இதனால் மன உளைச்சலில் இருந்த இவர் நேற்று மதியம் தோட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் யாரும் இல்லாத போது செடிகளுக்கு அடிக்கக்கூடிய பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் 


இதை அறிந்து அவரது குடும்பத்தினர் இவரை மீட்டு பொம்மிடியில்உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக இவர் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் ஒடசல்பட்டி கூட்ரோடு என்ற இடத்தில் உயிரிழந்தார், இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது


இச்சம்பவம் குறித்து இறந்து போன செல்வராஜின்  தந்தை தேவன் கொடுத்த புகாரின் பேரில் பொம்மிடி காவல் ஆய்வாளர் பொறுப்பு நாகலட்சுமி வழக்கு பதிவு செய்தார். சம்பவம் குறித்து காவல் உதவி ஆய்வாளர் முருகன் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884