பாலக்கோட்டில் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர் மன்றத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 28 நவம்பர், 2022

பாலக்கோட்டில் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர் மன்றத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.


தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பாலக்கோடு ஒன்றிய  உதயநிதி ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் ஒன்றிய செயலாளர் பி.என்.பி வெங்கடேசன் தலைமையில் திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 45வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், இனிப்புக்கள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இதில் சிறப்பு அழைப்பாளராக பாலக்கோடு திமுக பேரூர் கழக செயலாளரும், பேரூராட்சி தலைவருமான பி.கே.முரளி கலந்துகொண்டு மாணவ - மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் மற்றும் இனிப்புக்களை வழங்கினார்.


இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுண்சிலர்கள் பி.எல்.ஆர்.ரவி, மோகன், ஜெயந்திமோகன், கனேசன் மற்றும் ரசிகர் மன்றத்தினர் திமுக கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் என திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.