
மேலும் ஊராட்சி உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடு, கடை, வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி மற்றும் குடிநீர் வரி உட்பட அனைத்து விதமான வரிகளும் இனி இணையதளம் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும் என்றும் , கால்நடைகளை அதிகம் தாக்கும் பெரியம்மை நோய் போன்றவற்றை தடுப்பது குறித்தும் மழைக்காலங்களில் சீரான குடிநீர் வினியோகம் மற்றும் கழிவுநீர் கால்வாய் பகுதியில் கிருமி நாசினி பவுடர் தெளிப்பது, இப்பகுதியில் நீர்பாசனம் மூலம் விவசாயிகள் அதிக அளவில் கரும்பு சாகுபடி செய்து குறித்தும் முன்னதாக நவம்பர் 1ம் தேதி உள்ளாட்சி தினமாக அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்தும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கொரோனா கால கட்டத்தில் சிறபாக பணியாற்றியவர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மண்டல அலுவலர் பூர்ணிமா , அலுவலர்கள் சிவசத்தியா, தங்கவேல், ஜெர்த்தலாவ் ஊராட்சி மன்ற தலைவர் முத்துமணி ஆனந்தன், எர்ரணஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி சின்னவன், பேவுஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ், கணபதி ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி, பேளாரஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ராதா மாரியப்பன், ஊராட்சி செயலாளர்கள் சண்முகம்,பவுன்ராஜ், சதிஷ், முருகேசன், துணை தலைவர் சுதா சித்தராஜ், வேளாண் அதிகாரி முருகன், தலைமை ஆசிரியர்கள், கால்நடை மருத்துவர் தீயாகசீலன், கிராம நிர்வாக அதிகாரி, வார்டு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக