அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பென்னாகரம் மற்றும் நாட்டு நலபணி திட்டம் பென்னாகரம் இணைந்து மாபெரும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வார விழா பெண்ணாகரம் அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது.
நிகழ்வில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நோக்கில் "ஊழலை ஒழிப்போம் புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற பெருமையில் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் பா. பழனிச்சாமி காவல் ஆய்வாளர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு தருமபுரி மற்றும் விஷ்ணு பிரியா மேலாளர் தமிழ்நாடு கிராம வங்கி பாப்பாரப்பட்டி ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தார் நிகழ்வில் கல்லூரி முதல்வர் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்ட
னர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக