மற்றும் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதால் தாழ்வாக உள்ள பகுதியில் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்வது, தேங்கிய கழிவுநீரை அகற்றி கிருமி நாசினி தெளித்தல், குப்பைகழிவுகள் தேங்கமால் பார்த்து கொள்ளுதல், பழுதாகியுள்ள சாலைகளை சீர் செய்தல், பழுது அடைந்துள்ள மின்கம்பங்களை மாற்றுதல் போன்ற முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்து உடனடியாக சரி செய்தல் போன்ற தீர்மானங்கள் படிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டடம் வார்டு மன்ற உறுப்பினர்கள் ஜெயந்தி மோகன், விமலன், பத்தேகான், குமார், பி.எல்.ஆர்.ரவி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் துனை தலைவர் தஹசீனா இதயத்துல்லா மற்றும் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரவிந்திரன், தலைமை எழுத்தர் அபுபக்கர், பிட்டர் ராமலிங்கம், கமிட்டி உறுப்பினர்கள் செந்தில், துரைராஜ், அன்வர்பாஷா, மரு.ஆனந்தன் மன்சூர், லோகேஷ்வரி, ஆகியோர் மற்றும் சமூக ஆர்வலர்கள், மகளிர் சங்க பிரதிநிதிகள், இளைஞர்கள் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமணன் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக