தர்மபுரி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் மாது தலைமையில் நடந்த இவ்விழாவில், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மற்றும் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டிஎன்வி செந்தில் குமார் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சுமார் 200 தென்னை மரக்கன்றுகளும், சுமார் 100 பெண்களுக்கு புடவைகளும் வழங்கி சிறப்புரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் மனோகரன், பொதுக்குழு உறுப்பினர் லட்சுமணன், , முனியப்பன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செல்லதுரை, மகேஷ், மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் வீரமணி, ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் காளியப்பன், வெள்ளாளப்பட்டி ஊராட்சி செயலாளர் பழனிச்சாமி, நிலவழகன், ஒன்றிய நிர்வாகிகள் சண்முகம், பழனி, கோவிந்தராஜ், ராஜவேலு, சர்க்கரை, மாது, மகாலிங்கம், பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகளும் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக