Type Here to Get Search Results !

புதிய இரண்டு மின்மாற்றிகளை தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார்.


பொதுமக்களுக்கு தங்குதடையின்றி சீரான மின்சாரம் வழங்கும் நோக்கில் புதிய இரண்டு மின்மாற்றிகளை தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தருமபுரி மின் பகிர்மான வட்டம், தர்மபுரி ஊராட்சி ஒன்றியம், மிட்டாநூலஅள்ளி ஊராட்சி, சின்னநூலஅள்ளி கிராமத்தில் ரூபாய் 3.10 இலட்சம் மதிப்பீட்டிலும்,  முக்கல்நாய்க்கன்பட்டி கிராமத்தில் ரூபாய் 2.60 இலட்சம் மதிப்பீட்டிலும்,  பொதுமக்களுக்கு தங்குதடையின்றி சீரான மின்சாரம் வழங்கும் நோக்கத்தில் அமைக்கப்பட்ட புதிய இரண்டு மின்மாற்றிகளை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டிஎன்வி செந்தில்குமார் அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். 


இந்நிகழ்ச்சியில், மின்வாரிய செயற் பொறியாளர் வரதராஜன், உதவி செயற் பொறியாளர் தமிழரசி, உதவி பொறியாளர் மலர்விழி, ஃபோர்மேன்  பழனியப்பன், வயர்மேன் பெரியசாமி, வணிக உதவியாளர் சிவக்குமார் உள்ளிட்ட மின்வாரிய ஊழியர்கள், ஊர் முக்கிய பிரமுகர்களான ஊராட்சி தலைவர் பச்சியம்மாள், கவுன்சிலர் கோபால், முருகன், மாது, சித்தன், கிருஷ்ணமூர்த்தி  மற்றும்   பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884