Type Here to Get Search Results !

பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு சார்பாக கலைத் திருவிழா நடைபெற்றது.


பாப்பாரப்பட்டி தியாகி சுப்பிரமணிய சிவா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு சார்பாக கலைத் திருவிழா நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. தமிழ்வாணன் கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.  

ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கருவி இசை போட்டிகளில் தோல் கருவி, கம்பி கருவி, காற்று கருவி ஆகியவைகளுக்கான போட்டிகள் ஒன்றிய அளவில் நடைபெற்றது. இந்தப் போட்டிகளுக்கான மைய பொறுப்பாளர்களாக வட்டார கல்வி அலுவலர்கள் திரு. இரா. மணிகிருஷ்ணன், திரு.இரா. துளசிராமன், தலைமை ஆசிரியர் M. சின்னசாமி, தலைமை ஆசிரியர் மா. பழனி ஆகியோர் மையப் பொறுப்பாளர்களாக செயல்பட்டனர்.


போட்டிக்கான நடுவர்களாக ஆசிரியர்கள் சரவணன், மணிவாசகம், வினாயகம் ஆகியோர்  செயல்பட்டனர். தோல் கருவி போட்டியில் பாப்பாரப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவன்  மகேஷ் சர்மன்  முதலிடமும் சின்னப்பளத்தூர் நடுநிலைப்பள்ளி  மாணவன் பெரியண்ணன் ஆகியோர் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றனர்.


வட்டார வளமை ஆசிரியர் பயிற்றுநர்கள் கோவிந்தன், கமலேசன் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.  

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884