Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே ஏரியை குத்தகை விட வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகை.


பாலக்கோடு அருகே ஜெர்த்தலாவ் ஊராட்சியில் சுமார் 59 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஜெரத்தலாவ் ஏரியில் மீன் பிடிக்க குத்தகை விடக் கூறி 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாலக்கோடு பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாலக்கோடு அருகே உள்ள ஜெர்த்தலாவ் ஏரி கடந்த பசலி ஆண்டில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டு மீன் பிடி குத்தகை நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் அந்த குத்தகையானது கடந்த 31-6-2022 அன்று குத்தகை காலம் முடிவடைந்ததையோட்டி ஏரியை ஏலம் விடக் கூறி சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு உதவி பொறியாளர் வெங்கடேஸ்வரன் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 


இது குறித்து அவர் பொதுமக்களிடம் சென்ற பசலி ஆண்டு ஏலம் எடுத்த உரிமை காலம் கடந்த ஜூன் மாதம் முடிவடைந்து விட்டதால் தற்பொழுது ஏலம் விட தயார் செய்திருந்த நிலையில் சென்றமுறை ஏலம் எடுத்திருந்த நபர்கள் தங்களுக்கு நஷ்டம் அடைந்து விட்டதாக  உரிமை காலத்தை நீட்டிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர் எனவே ஒரு வார காலம் மீன்பிடி ஏலத்தை இன்று  நிறுத்தி வைத்தார் உடனடியாக  பொதுப்பணித்துறை சார்பில் வழக்கை சந்தித்து மீண்டும் ஏலம் விடும் தேதி அதிகாரப்பூர்வ  அறிவிக்கப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்தார்.


பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை திடீரென 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டதால் அப்பகுதி பதற்றத்துடன் காணப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884