தர்மபுரி கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட வாணியர் சங்க சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா, கல்வி ஊக்கத்தொகை, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழா, தர்மபுரி தனியார் மண்டபத்தில் நடந்தது.
இவ்விழாவிற்கு ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்ட தலைவர் காந்தி தலைமை தாங்கினார். ஊத்தங்கரை ஸ்ரீ சக்தி விநாயகா ஸ்பின்னிங் மில் சேகர், சௌந்தர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகிக்க, மாவட்ட செயலாளர் வாசுதேவன் வரவேற்புரை ஆற்றினார். தென்னிந்திய வாணியர் சங்க செயலாளர் சங்கர் ஜாதக பரிவர்த்தனையை துவக்கி வைத்தார்.
தென்னிந்திய வாணியர் சங்க தலைவர் சண்முகம் மகாத்மா காந்திஜி படத்திற்கு மாலை அணிவித்து புகழுரை ஆற்றினார். துணை தலைவர் வடிவேல், சேலம் மாவட்ட வாணியர் சங்க தலைவர் ராமலிங்கம், பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி, காவேரிப்பட்டினம் ஸ்ரீ ராஜகணபதி இண்டஸ்ட்ரீஸ் கோவிந்தராஜ், மாரண்டஅள்ளி முன்னாள் தலைவர் ராமநாதன் ஆகியோ சிறப்புரை ஆற்றினர்.
இவ்விழாவில் தர்மபுரி டாக்டர் குமுதா, வழக்கறிஞர் ராஜேந்திரன் உள்ளிட்ட 6 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், நலிவடைந்த 8 பேருக்கு தையல் இயந்திரமும் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக