Type Here to Get Search Results !

நேரு யுவ கேந்திராவின் சார்பில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியின் அடிப்படையில் பனைவிதை நடும் நிகழ்வு.

தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியின் அடிப்படையில் பனைவிதை நடும் நிகழ்வு பூமரத்தூர் காமராஜர் இளைஞர் நற்பணி மன்றத்தினருடன் இணைந்து தருமபுரி இலக்கியம்பட்டி ஏரி பகுதியில் நடத்தப்பட்டது. பனை விதை நடும் நிகழ்ச்சியினை நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் தொடங்கி வைத்தார். 


கிருஷ்ணா செவிலியர் கல்லூரியின் முதல்வர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.100க்கும் மேற்ப்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு இலக்கியம் பட்டி ஏரியை சுற்றி 500 பனை விதைகளை நட்டனர். மேலும் கிருஷ்ணா செவிலியர் கல்லூரியின் விரிவுரையாளர்கள் பொன்னம்பலம், ரஞ்ஜிதா, மகேஷ்வரி, காமதேனு, நேரு யுவ கேந்திராவின் சார்பில் தேசிய இளைஞர் தொண்டர் ஞானராஜ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.


நிறைவாக பூமரத்தூர் காமராஜர் இளைஞர் நற்பணி மன்ற செயலாளர் ஜோதிபாஸ் நன்றி கூறினார். மேற்கூறிய பனை விதை நடும் நிகழ்ச்சி சிறப்பாக நடத்திட தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி கே.சாந்தி       இ ஆ ப அவர்கள் 500 பனைவிதைகளை இலவசமாக வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884