Type Here to Get Search Results !

பாலக்கோடு காவல் நிலையத்தில் இரு வேறு மதத்தை சேர்ந்த பட்டதாரி காதலர்கள் தஞ்சம்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தீர்த்தகிரி நகர் பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகன் அரவிந்த் பிரசாத் (வயது. 26) டிப்ளோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார், அதே பகுதியை சேர்ந்த மாதுராஜ் என்பவரின் மகள் அனிசா (வயது. 21) தர்மபுரி தனியார் கல்லூரியில் பி.எட் படித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் பள்ளியில் படிக்கும் போதிருந்தே கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.  இவர்கள் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இதனால் நேற்று இருவரும்   வீட்டை விட்டு வெளியேறி ஊத்தங்கரை முருகன் கோவிலில் திருமணம்  செய்து  கொண்டு பாதுகாப்பு கேட்டு பாலக்கோடு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து சமரச முயற்சியில் ஈடுபட்டனர். பெற்றோர்கள்  சம்மதிக்காததால் காதலனுடன் காதலியை தனியே அனுப்பி வைத்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884