Type Here to Get Search Results !

தருமபுரி நகராட்சி தொடக்கப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.


ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தருமபுரி ஒன்றியம் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தர்மபுரி ஒன்றியம் சார்பாக தருமபுரி நகராட்சி தொடக்கப்பள்ளியில் அமைந்துள்ள ஆதார வளமையத்தில் 29.11.2022 அன்று காலை 10 மணிக்கு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. விளையாட்டுப் போட்டிகளை தர்மபுரி மாவட்ட உதவி திட்ட அலுவலர் திருமதி. மஞ்சுளா தலைமை ஏற்று நடத்தினார்.


தர்மபுரி நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி.கல்விக்கரசி, தர்மபுரி நகராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. அகிலா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி. மோகனப்பிரியா, மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் திரு.சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.


இதில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக ஓட்டப்பந்தயம் ,ஸ்பூன் வித் லெமன், காய்கறிகளை ஒன்று சேர்த்தல், மியூசிக்கல் சேர் போன்ற போட்டிகள் நடைபெற்றன இதில் பங்கு பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் பதக்கம் ,சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன இந்நிகழ்வினை தருமபுரி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) கவிதா மற்றும் வட்டார மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ஒருங்கிணைப்பாளர் திரு .சிவக்குமார் ஆகியோர் பொறுப்பேற்று நடத்தினர். 


இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர்கள் திரு. சிவகுமார், திரு. முனியப்பன், திரு.மோகன் மற்றும் சிறப்பாசிரியர்கள்  ரகுபதி ராஜ்மோகன் வனிதா, சாரதா, திருநாவுக்கரசு, முனியம்மாள் மற்றும் இந்திரா ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மாற்றுத்திறனாளி  குழந்தைகளுக்கும் சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884