பாலக்கோடு நகரை சுற்றி சந்துக் கடைகளில் அரசு மதுபானங்களை பதுக்கி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. டிஎஸ்பி சிந்து தலைமையில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது புதூர் மாரியம்மன் கோவில், குத்தலஹள்ளி பகுதியை சேர்ந்த சரவணன் முத்துலிங்கம் ஆகிய இருவரை கைது செய்து 400 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவான மூன்று பேரை தேடி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக