Type Here to Get Search Results !

காலாண்டு விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

காலாண்டு விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குவிந்த சுற்றுலாப் பயணிகளால் கலை கட்டியது ஒகேனக்கல் சுற்றுலா தளம்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு காவிரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால் அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் சேதங்கள் ஏற்பட்டன. இதனால் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் அருவி மற்றும் ஆற்று பகுதிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் விதிக்கப்பட்டு தடை தொடர்ந்து நீடித்து வருகிறது. பரிசல் இயக்கம் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் இங்கு சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து கொட்டும் அருவிகளை உற்சாகத்துடன் பார்த்து வருகின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இன்று காலை முதலிருந்தே ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் கூட்டம் கூட்டமாக தங்கள் குடும்பமங்களுடன் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். அருவி மற்றும் ஆற்றுப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கின் போது ஏற்பட்ட சேதங்களை சீர் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். காலாண்டு விடுமுறை மற்றும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்தது வருவதால் ஒகேனக்கல் சுற்றுலா தளம் கலை கட்டியது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies