மாரண்டஹள்ளியில் சாக்கடையில் இருசக்கர வாகனம் சிக்கி வாலிபர் பலி. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 25 அக்டோபர், 2022

மாரண்டஹள்ளியில் சாக்கடையில் இருசக்கர வாகனம் சிக்கி வாலிபர் பலி.

தருமபுரி மாவட்டம். பாலக்கோடு அடுத்த பனங்காடு பகுதியை சேர்ந்த கார்த்திக் இவரது நண்பர் விசால் இருவரும் நேற்று இரவு மாரண்டஅள்ளியில் நடந்த பிறந்தநாள் விழாவிற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றனர், பின்னர் பிறந்த நாள் விழா முடிந்து மீண்டும் இருவரும் வீட்டிற்கு திரும்பி வரும் போது, மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி அருகே இருசக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த சாக்கடை கால்வாயில் வாகனம் இறங்கி சிக்கிகொண்டது. 

இந்த விபத்தில் சம்பவ இடத்திலியே கார்த்திக் உயிரிழந்தார். பைக்கில் வந்த விசால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மாரண்டஅள்ளி போலீசார் விசாரணை செய்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad