வௌவால்கள் மீது அக்கறை கொண்டு தீபாவளியை துறக்கும் கிராம மக்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 25 அக்டோபர், 2022

வௌவால்கள் மீது அக்கறை கொண்டு தீபாவளியை துறக்கும் கிராம மக்கள்.

பாலக்கோடு அடுத்த பல்லேனஹள்ளி கிராமத்தில், சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் அருகில் உள்ள பழமையான ஆலமரம் மற்றும் புளியமரம் அமைந்துள்ளது உள்ளது. இந்த மரங்களில் கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக, சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய வகை வௌவால்கள் வசித்து வருகின்றன. 

இந்த வௌவால்களை அப்பகுதி மக்கள் புனிதமாக கருதி அந்த மரத்தின் அடியில் கோவில் ஒன்றை எழுப்பி அங்கு வௌவால் முனியப்பன் என சிலை வைத்து வௌவால்களை வழிப்பட்டு வருகின்றனர். பட்டாசு வெடிசத்தம் கேட்டால் வௌவால்கள் இங்கிருந்து பறந்து சென்று விடும் என அப்பகுதி தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிப்பதை தவிர்த்து வௌவால்களை  பாதுகாத்து வருகின்றனர். 

கருத்துகள் இல்லை:

Post Top Ad