இவர் கொரோனா காலத்தில் இறந்தவர்களின் 1200 உடல்களை அடக்கம் செய்துள்ளார். இதற்காக இவருக்கு மாவட்ட நிர்வாகம் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி உள்ளனர். மேலும் இவர் தனியாக மீட்டு குழு என ஒரு அறக்கட்டளை துவக்கி அதன் மூலம் சொந்த செலவில் சாலையோரங்களில் ஆதரவற்றவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை குளிக்க வைத்து பின்னர் தனது காரில் அழைத்து சென்று மருத்துவமனையில் சிகிச்சையளித்த பிறகு அவர்களை ஆதரவற்றவர்கள் இல்லத்தில் ஒப்படைக்கிறார்.
இந்த மீட்பு பணியில் அவரது மனைவி மற்றும் இரு மகன்களும் உறுதுணையாக உள்ளனர்.
இந்நிலையில் ஒகேனக்கல் பகுதியில் பொன்னி என்கிற வயதான மூதாட்டிக்கு உறவினர்களால் கைவிடப்பட்டு இருந்தார் அவர் உடல் நலம் சரியில்லாமல் படுத்த படு்க்கையாக உணவு தண்ணீரியின்றி இயற்க்கை உபாதைகளை அவர் படுத்திருந்த படுக்கையிலியே கழித்து வந்தார். மூதாட்டியை அங்கிருந்தவர்கள் யாரும் கண்டு கொள்ளாம் வேடிக்கை பார்த்து பரிதாபபட்டு சென்றனர்.
பிறகு அங்கு சுற்றுலா வந்த சுற்று பயணி ஒருவர் பாலசந்திரனுக்கு தகவல் அளித்தனர் பிறகு பாலசந்திரன் தனது காரில் தனது மனைவி மகன்களுடன் வந்து முகம் சுழிக்கமால் மூதாட்டியை எழுப்பி குளிக்க வைத்து அவரை தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துசென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சிகிச்சை முடிந்த பிறகு மூதாட்டியை காப்பகத்தில் ஒப்படைக்க உள்ளனர். பாலசந்திரன் குடும்பத்துடன் இந்த சேவை செய்து வரும் செயல் பொதுமக்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக