Type Here to Get Search Results !

காவிரியில் நீர்வரத்து குறைந்தது; அருவியில் குளிக்க, பரிசல் பயணத்திற்கு அனுமதி.

ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் நீர் வரத்து குறைந்ததால் 15 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் பரிசலில் செல்லவும் அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது

கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாகவும் கர்நாடகா அணையிலான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய இரு அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரின் காரணமாகவும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து  ஒரு லட்சத்து 85 ஆயிரம் வரை அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.


இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக ஒகேனக்கல்லில் சுற்றுலா பணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்கவும் அருவியில்  குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் 15 நாட்கள் தொடர் தடையை நீடித்தது இந்த நிலையில் படிப்படியாக நீர் வரத்து குறைந்து இன்று காலை நிலவரப்படி 20 ஆயிரம் கன அடியாக குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் பரிசலில் செல்லவும் அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது சுற்றுலா பணிகள் குளிக்கவும் பரிசலில் செல்ல அனுமதி வழங்கியதால் சுற்றுலாப் பயணிகள் பரிசலில் உற்சாகத்துடன் சென்று அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies