Type Here to Get Search Results !

வரும் 27ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் - மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 27.10.2022 வியாழக்கிழமை அன்று காலை 11.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது கோரிக்கைகளையும், கருத்துகளையும் தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தகவல்.


இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது. தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 27.10.2022 வியாழக்கிழமை அன்று காலை 11.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. எனவே, இவ்விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது கோரிக்கைகளையும், கருத்துகளையும் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies