Type Here to Get Search Results !

மனநல காப்பாகத்திற்கு தீபாவளி புத்தாடைகளை வழங்கிய தருமபுரி டெர்பி நிறுவனத்தினர்.


வருடந்தோறும் மை தருமபுரி சார்பாக தீபாவளி கொண்டாட்டம் தருமபுரியில் பகுதியில் அமைந்துள்ள மன நல காப்பகம், குழந்தைகள் இல்லம், முதியோர் இல்லம் ஆகிய இடங்களிலுள்ளவர்களும் சிறப்பாக  தீபாவளி திருநாளை புத்தாடை, இனிப்புகள், பட்டாசுகள் வழங்கி கொண்டாட மை தருமபுரி அமைப்பினர் உதவி வருகின்றனர். 

மை தருமபுரி அமைப்புடன் இணைந்து தருமபுரியை சார்ந்த பல்வேறு நபர்களும், வணிக நிறுவனங்களும் இந்த நிகழ்வில் தங்களின் பங்களிப்பை வழங்கி வருகின்றனர், அதில்  ஒரு பங்களிப்பாக தருமபுரி டெர்பி ஜீன்ஸ் ஷோரூம் நிறுவனர் திரு.நரேன் அவர்கள் 40 ஜீன்ஸ் பேண்ட்களை மனநல காப்பகத்திற்கு இலவசமாக மை தருமபுரி அமைப்பினரிடம் வழங்கினார்.  இவரது மனிதாபிமானமிக்க சேவையை பாராட்டி மை தருமபுரி அமைப்பின் சார்பாக டெர்பி நிறுவனத்திற்கு நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் தருமபுரி டெர்பி நிறுவனத்தினர் மற்றும் மை தருமபுரி தன்னார்வலர்கள் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies