தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) DDU-GKY திட்டத்தின் கீழ் நடத்தும் வேலையற்ற ஆண், பெண் இருபாலருக்கும் (இளைஞர்களுக்கு) இளைஞர் திறன் திருவிழா வரும் சனிக்கிழமை (29.10.2022) அன்று நடைபெற உள்ளது.

எனவே இளைஞர் திறன் திருவிழாவில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் 29.10.2022 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை பென்னாகரம், பழைய பேருந்து நிலையம் பின்புறம் சமுதாயக்கூடம் வளாகத்தில் நடைபெறும் இளைஞர் திறன் திருவிழாவில் பென்னாகரம் வட்டாரத்தை சேர்ந்த 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட 8-ஆம் வகுப்பு முதல், ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், இளங்கலை, முதுகலை பட்டம், B.E படித்த வேலையில்லா இளைஞர்கள் (ஆண்,பெண் இருபாலரும்) இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக