இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 449 மனுக்கள் வரப்பெற்றன.
இம்மனுக்களை பெற்றுகொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி, இஆப., அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அம்மனுக்களை வழங்கி, அம்மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறும்பான்மையினர் நலத்துறையின் சார்பில் 7 பயனாளிகளுக்கு தலா ரூ.5,479/- வீதம் ரூ.38,353/- மதிப்பிலான 7 இலவச தையல் இயந்திரங்களையும், 10 பயனாளிகளுக்கு தலா ரூ.4,871/- வீதம் ரூ.48,710/- மதிப்பிலான 10 இலவச சலவை பெட்டிகளையும் என மொத்தம் 17 பயனாளிகளுக்கு ரூ.87,063/- மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்கள் மற்றும் சலவை பெட்டிகளை வழங்கினார்கள்.
இதனை தொடர்ந்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் 100% ஆதார் எண்ணை இணைக்கும் பணியினை முழுமையாக மேற்கொண்ட பாலக்கோடு வட்டத்திற்குட்பட்ட 16 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும், பாலக்கோடு வட்டத்திற்குட்பட்ட 12 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும், காரிமங்கலம், பென்னாகரம், அரூர் ஆகிய 3 வட்டங்களில் தலா 2 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீதம் 6 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் என மொத்தம் 34 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு தங்களுடைய பாகங்களில் உள்ள வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள அனைத்து வாக்களர்களின் ஆதார் எண்களையும் 100% வாக்காளர் பட்டியலுடன் இணைத்தமைக்காக அவர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்கள்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திருமதி.வெ. தீபனாவிஸ்வேஸ்வரி இஆப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி. வி.கே.சாந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ) / உதவி ஆணையர் (கலால்) திரு.தணிகாசலம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் திருமதி.கவிதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.வி.ராஜசேகரன், மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.சவுகத் அலி உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


.jpg)