Type Here to Get Search Results !

தருமபுரி கோட்டை, அருள்மிகு. கல்யாண காமாக்ஷியம்பிகை உடனமர் மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயிலில் தூய்மைப் பணி.

வரலாற்று சிறப்புமிக்க, தமிழகத்தின் முன்னணி கோயிலான "நுளம்ப பல்லவர்கள்" கட்டிடக்கலைக் கோயிலான தருமபுரி கோட்டை, அருள்மிகு. கல்யாண காமாக்ஷியம்பிகை உடனமர் மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயிலில், (09.10.22/ஞாயிறு) காலை 7:00 மணி முதல் 11:00 மணி வரை ஆலால சுந்தரர் இறைபணி பேரவை வழிகாட்டுதலில் தகடூர் இளைஞர் சங்கமம் (Thagadur Youth Club) சமூக அமைப்பின் சார்பில் திருக்கோயிலில் தொடர்ந்து ஆறாவது வாரமாக தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. 

இப்பணியில் புகழ்வேல், கபிலன்,சந்திரமோகன், தகடூர் பிறைசூடன், குணா, இராஜசிற்பி, இராஜ்குமார் மற்றும் சண்முகம் ஆகியோர் பங்குகொண்டனர்.தி ருக்கோயிலில் தூய்மைப் பணி மேற்கொண்டோரை திருக்கோயில் சிவாச்சாரியார் பரத்வாஜ் அவர்கள் பாராட்டினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies