Type Here to Get Search Results !

550 ஆவது நாள் மைதருமபுரி பசிக்குதா வாங்க சாப்பிடுங்க திட்டம்.

மை தருமபுரி அமைப்பின் சார்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14 முதல் சாலையில் பசியால் செல்பவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. நானூறு நாட்களை கடந்த பிறகு தருமபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள நோயாளிகளின் பார்வையாளர்களுக்கு மதிய உணவு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. 

இன்று டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் 91 ஆவது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் 550 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இன்று உணவு வழங்க சிறப்பு விருந்தினராக திரு.B.சுரேஷ் குமார்., PSB டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் நிறுவனர் கலந்து கொண்டார். மை தருமபுரி பசிக்குதா வாங்க சாப்பிடுங்க திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.ப.தமிழ்செல்வன் அவர்களின் தலைமையில் மை தருமபுரி அமைப்பினர் ஜனனி சத்தியநாதன், ஜாபர், தாரணி, தமிழரசு ஆகியோர் உணவு வழங்கினர். உணவை வீணாக்காதீர்கள் உணவை பகிர்ந்து அளித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies