Type Here to Get Search Results !

பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் வெள்ளப்பெருக்கு 28 ஆயிரம்கன அடி நீர் வெளியேற்றம்.

பாலக்கோடு அருகே  பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் வெள்ளப்பெருக்கு  28 ஆயிரம்கன அடி நீர் வெளியேற்றம் -  கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி சின்னாறு அனையின்  நீர்வரத்து பகுதியான  தளி, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட காப்புக்காடு பகுதிகளிலும் தொடர் கனமழைப் பொழிவின் காரணமாக எச்.செட்டி அள்ளி அருகே அருள் ஏரி, குட்டூர் அருகே ராயல் ஆச்சாரி ஏரி ஆகிய 2 ஏரிகள் உடைந்ததால்  பஞ்சப்பள்ளி அனைக்கு 28 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் பாதுகாப்பு கருதி பொதுபணிதுறையினர் அணைக்கு வரும்  28 ஆயிரம் கன அடி நீர் முழுவதும் மூன்று மதகுகளின் வழியாக வெளியேற்ற்றி வருகின்றனர்.

இதனால் பஞ்சப்பள்ளி , தேன்கனிகோட்டை - மாரண்டஅள்ளி சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் கரகூர், அத்தி முட்லு, மாரண்டஅள்ளி மற்றும் கரையோர கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிபட்டு வருகின்றனர்.

பஞ்சப்பள்ளி, சாமனூர், மாரண்டஹள்ளி, அத்திமுட்லு, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில்  ஆற்றின்  கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies