பொது சுகாதார துறையின் 100 ஆம் ஆண்டு நிறைவு விழா பென்னாகரம் வட்டாரத்தின் சார்பாக ஆரம்ப சுகாதாரத்தில் நடைபெற்றது.
மக்கள் சேவையில் பொது சுகாதார துறையின் 100 ஆண்டுகள் நிறைவு விழா பென்னாகரம் வட்டாரத்தின் சார்பாக இன்று 13.10.2022 அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நாகதாசம்பட்டியில் பென்னாகரம் வட்டார மருத்துவ அலுவலர் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் பொது சுகாதாரத்துறை பென்னாகரம் வட்டாரத்தில் பணிபுரியும் அனைத்து நிலை பணியாளர்களும் கலந்து கொண்டனர் அவர்களுக்கு பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றது போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பென்னாகரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெயச்சந்திரபாபு அவர்கள் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.


