Type Here to Get Search Results !

பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ஆசிரியர் தின விழா.

பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 5.9.2022 திங்கட்கிழமை ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தீரன் கல்வி அறக்கட்டளை இணைந்து பள்ளியில் பணியாற்றக்கூடிய 47 ஆசிரியை ஆசிரிய பெருமக்களுக்கும் 6 சிறப்பு ஆசிரிய பெருமக்களுக்கும் "கனவு ஆசிரியர்" என்னும் நூலினை வழங்கி ஆசிரியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவில் பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியை திருமதி. உமா மகேஸ்வரி அவர்கள் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு புத்தகம், வாழ்த்து அட்டை, மற்றும் கவிதை பிரதியினை வழங்கி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்கள் முன்னிலையில் பங்கேற்றது மேலும் சிறப்பான அமைவாக அமைந்தது, இந்நிகழ்விற்கான ஏற்பாட்டினை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஆசிரியர் சி.சரவணன் மேற்கொண்டார் மற்றும் அவருடன் உதவி திட்ட அலுவலர் ஆசிரியர் திரு தாமோதரன், திரு கிருஷ்ணன், வேளாண்துறை ஆசிரியர், ஆசிரியர் மன்ற செயலர் திரு.முனியப்பன் போன்றோர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

முன்னதாக பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பள்ளிக்கு வந்து ஆசிரிய பெருமக்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்து சென்றார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies