பாலக்கோடு, செப்டம்பர் 24 | புரட்டாசி 08:
பாலக்கோடு அடுத்த பெத்தனஅள்ளி கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் மணிகண்டன் (38) கடந்த சில மாதங்களாக வயிற்றுவலி காரணமாக அவதிப்பட்டு வந்தார். இவர் திருமணமாகி, 15 வயது மகன் மற்றும் 13 வயது மகளுடன் வாழ்ந்தவர்.
பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையாத காரணத்தால், நேற்றிரவு வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார், தகவலறிந்த பாலக்கோடு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடக்கிறது. வயிற்றுவலி காரணமாக லாரி டிரைவர் உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.