Type Here to Get Search Results !

பாலக்கோடு பட்டத்தரசியம்மன் கோயில் அருகே நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.


பாலக்கோடு, செப்டம்பர் 26 | புரட்டாசி 10 :

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட 3வது வார்டில் உள்ள பட்டத்தரசியம்மன் கோயில் முன்பு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி விழா பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி தலைமையில் நடைபெற்றது.


இந்த விழாவில் பேரூராட்சி கவுன்சிலர்கள் மோகன், ஜெயந்திமோகன், சரவணணன், சிவசங்கரி, ரூஹித், சாதிக்பாஷா, வகாப்ஜான் முன்னிலை வகித்தனர். பொதுமக்களின் நலனுக்காகவும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், 3வது வார்டில் உள்ள பட்டத்தரசியம்மன் கோயில் அருகே நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் மூலம் ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.


அதன்பின், பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி அவர்கள் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். இதன் மூலம் 3வது, 8வது மற்றும் 2வது வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறுவர்.


நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய துணை செயலாளர் பி.எல். ரவி, நகர அவைத் தலைவர் அமானுல்லா, ஒன்றிய பிரதிநிதி பெரியசாமி, மீனவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் குமரன், மோகன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி துரைமுருகன், மாவட்ட மாணவர் அணி சந்தர், ஒன்றிய துணை செயலாளர் மாதேஷ், கிளை செயலாளர்கள் ராஜீ, ராமமூர்த்தி, மியான், ராஜேஷ், நகர தொழிலாளர் அணி நிர்வாகிகள் சக்திவேல், சிவா, நகர நிர்வாகிகள் லட்சுமணன், சிவகுமார், சரவணன், தயாநிதி, நட்ராஜ், பத்ரி, தகவல் தொழில்நுட்ப நிர்வாகி ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies