Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

அரசு பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா, அமைச்சர்கள் பங்கேற்பு.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு  விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் முரளி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தடங்கம் சுப்ரமணி, இன்பசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர் கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு 379 மாணவிகளுக்கு  விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில்  பாலக்கோடு பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி, தாசில்தார் ராஜசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, வட்டார கல்வி அலுவலர் அன்புவளவன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இறுதியாக பள்ளி தலைமை ஆசிரியர் கலைச்செல்வி நன்றி தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884