Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பாலக்கோடு அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையத்தில் அதிமுக நகர கழகம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114 - வது  பிறந்தநாள் விழா நகர கழக செயலாளர் ராஜா தலைமையில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு   மாவட்ட  அவைத் தலைவர் தொ.மு.நாகராசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன்,  ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் செந்தில், கோபால், மாரண்டஅள்ளி நகர செயலாளர் கோவிந்தன், மாவட்ட கவுன்சிலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் பஸ் நிலையத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

முன்னதாக புரட்சி தலைவர், எம்.ஜி.ஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும்  கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில்   கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள்  திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884