Type Here to Get Search Results !

தொப்பூர் கணவாயில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து.

ஆந்திர மாநிலத்தில் இருந்து ஆசீட் ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திற்கு புறப்பட்டது. இந்த லாரியை திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த டிரைவர் பாலகிருஷ்ணன் (வயது40) என்பவர் ஓட்டி வந்தார். 

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டிரைவர் இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தார். விபத்து குறித்து தொப்பூர் போலீசாருக்கும், சுங்கச்சாவடி ரோந்து படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து விபத்தில் சிக்கிய டிரைவரை மீட்டனர். 

பின்னர் அவரை சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து விபத்துக்குள்ளான டேங்கர் லாரியை கிரேன் மூலம் போலீசார் மீட்டு அப்புறப்படுத்தினர். இந்த விபத்தால் தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பாதிப்புக்குள்ளாகினர். 

இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies