தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் அறிவது. முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்களுக்கான வேலைவாய்ப்பினை ஊக்குவித்திடும் பொருட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் கீழ்க்காணும் பல்வேறு விதமான தொழிற்பயிற்சிகள் வழங்கிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
- கைபேசி பழுது நீக்குதல்
- கார் மெக்கானிக்
- ஏசி குளிர் சாதனப்பெட்டி பராமரிப்பு
- எலக்ட்ரீசியன்
- பிளம்பிங்
- ஓட்டுநர் பயிற்சி
- மின்சாரத்தால் இயங்கும் சீருந்துகள் பராமரித்தல் மற்றும் அதற்கான மின்சார பேட்டரி பராமரித்தல்/பழுது பார்த்தல்
- மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனங்கள் பழுது பார்த்தல்/ பராமரித்தல் மற்றும் பேட்டரி சார்ஜ் செய்வதற்கான நிலையம் அமைத்து பராமரித்தல்
- தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு
- கணினி - தட்டச்சு பயிற்சி மற்றும் வன்பொருள் பழுதுபார்த்தல்
எனவே மேற்குறிப்பிட்ட தொழிற் பயிற்சிகளில் பயிற்சி பெற விரும்பும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர்கள் 10.09.2022க்குள் தங்களது பெயரினை தருமபுரி மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை அணுகி பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
