Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

உணவு தண்ணீர் தேடி விவசாய நிலத்தில் புகுந்த மூன்று காட்டு யானையால் கிராம மக்கள் பீதி.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

பாலக்கோடு அருகே கூலன் கொட்டாய் கிராமத்தில்  நேற்றிரவு  உணவு மற்றும் தண்ணீர் தேடி 20 வயது கொண்ட இரண்டு ஆண் யானைகள் ஒரு பெண் யானை என மொத்தம்  3 காட்டு யானைகள், சின்னபாப்பன், முனிராஜ், திம்மராஜ், சின்னராஜ் ஆகியோரது  நெல், வாழை, மா தோட்டத்திற்க்குள் நுழைந்து  மாமரத்தை சாய்த்தும், வாழை, நெல், தக்காளி உள்ளிட்ட பயிர்களை மிதித்து சேதப்படுத்தியது.

யானையின் பிளிறல்  சத்தம் கேட்டு கிராம மக்கள் பாலக்கோடு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் அப்பகுயில் முகாமிட்டுள்ள யானைகளை அருகில் உள்ள போலுமலை காப்புக் காட்டிற்க்கு  3 காட்டு யானைகளும் விரட்டினர்.

இது குறித்து கூறிய அப்பகுதி விவசாயிகள் கூறுகையில்  அடிக்கடி யானைகள் இரவு நேரத்தில் கிராமத்தில் புகுந்து விவசாய பயிர்களையும், மாந்தோட்டங்களையும் அழித்து வருவதாகவும், அரசாங்கம் தரும் நஷ்டஈடு போதுமானதாக இல்லை எனவும் மேலும் இக்கிராமத்தில் இதுவரை எங்குமே தெருவிளக்கு அமைக்கப்படாமல் கிராமமே இருளில் மூழ்கி உள்ளதால் தான் யானை அடிக்கடி ஊருக்குள் வருவதாகவும், யானைக்கு பயந்து உடல் உபாதைகளை கழிக்க கூட வெளியே வர பயப்படுகின்றனர்.

எனவே எங்கள் கிராமத்திற்க்கு தெருவிளக்கு அமைத்து தர மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884