Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

சின்னபெரமனூர் கிராமத்தில் படவட்டம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் அக்னி குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள அஞ்சேஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட சின்னபெரமனூர் கிராமத்தில் உள்ளது அருள்மிகு ஸ்ரீ படவட்டம்மன் திருக்கோயில். இக்கோவில் திருவிழா கடந்த 12-ம் தேதி பக்தர்களுக்கு கங்கானம் கட்டி, அம்மனுக்கு கூழ் ஊற்றுதலுடன் விழா துவங்கியது. 13-ம் தேதி கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. 

விழாவின் முக்கிய நாளான இன்று காலை கங்கை பூஜை, பூங்கரகம் அழைக்கப்பட்டது. பின்னர் கோயில் வளாகத்தில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக அக்னி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி வெகுவிமர்சியாக  பம்பை வாத்தியங்கள் வாணவேடிக்கை முழங்க நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு படைக்கும் நிகழ்ச்சியும், அம்மனுக்கு பாலபிஷேகம் உட்பட பல்வேறு அபிஷேக ஆராதனைகள், மகா தீபாரதனை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. 

தொடர்ந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்திட ஆடு, கோழி பலியிட்டு பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். நாளை பக்தர்கள் மஞ்சள் நீராடுதலுடன் கோவில் விழா நிறைவு பெறுகிறது. இதில் இதில் சின்னபெரமனூர், பி.அக்ரஹாரம், கெட்டூர், பவளந்தூர், ஜெல்மாரம்பட்டி, மன்னேரி, பூஞ்சோலை ஆகிய கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884