Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

அரூர் வட்டார விவசாயிகள் விதை பண்ணை அமைத்து அதிக லாபம் பெற ஆலோசனை.

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டாரத்தில் தற்சமயம் மழை பெய்து வருவதால் அரூர் வட்டார விவசாயிகள் குறைந்த காலத்தில் அதிக லாபம் பெற விவசாயிகள் விதை பண்ணை அமைத்து பயனடையலாம் என வேளாண்மை உதவி இயக்குனர் (பொ)திரு குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். 

மேலும் வேளாண்மை கிடங்கு அரூர் அலுவலகத்தில் தற்சமயம் விவசாயிகளுக்கு உயர் விளைச்சல் தரக்கூடிய ரகங்கள் உளுந்து வம்பன் 8, 9 ,10 மற்றும் பாசிப்பயிறு co  8 மற்றும் காராமணி COCP 7 ,  வம்பன் 3 ஆகிய விதைகள் இருப்பில் உள்ளது உளுந்து ஏக்கருக்கு 400 கிலோவும் பாசிப்பயிறு ஏக்கருக்கு 450 கிலோவும் காராமணி ஏக்கருக்கு 350 கிலோ  மகசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

விவசாயிகள் பின்வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பயறு வகை பயிர்களில் அதிக லாபம் பெற அறிவுரை வழங்கி உள்ளார்கள். குறிப்பாக பயறு வகை பயிர்களை வரிசை முறையில் நடவு செய்ய வேண்டும் பின்பு பூ பூக்கும் தருணத்தில் இரண்டு சதவீத டிஏபி கரைசல் தெளிக்க வேண்டும் அல்லது ஏக்கருக்கு   2 கிலோ பல்ஸ் ஓன்டர் இவற்றில் ஏதாவது ஒன்றை படுத்தி மகசூலை அதிகரிக்கலாம்   மேலும் பூச்சி மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த மஞ்சள் வண்ண அட்டை பயன்படுத்த வேண்டும் அல்லது  பூச்சிகளை கட்டுப்படுத்த இரண்டு முதல் மூன்று சதவீத  வேப்ப எண்ணெய் கரைசலை தெளிக்க வேண்டும் மேற்கண்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குறுகிய காலத்தில் பயறு வகை பெயர்களில் விதைப் பண்ணை அமைத்து விவசாயிகள் அதிகம் லாபம் பெற வேளாண்மை உதவி இயக்குனர்( பொ ) திரு குமார் அவர்கள் விவசாயிகளுக்கு ஆலோசனை கூறியுள்ளார்கள். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884