Type Here to Get Search Results !

ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்ம பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மல்லசமுத்திரம்  கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத  ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்ம பெருமாள், ஆலய  அஷ்டபந்தன மகாகும்பாபிஷேக பெருவிழா வெகுவிமர்சையாக நடைப்பெற்றது.

இந்த விழா நேற்று முன்தினம் 29ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது.  இன்று அதிகாலை  கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்ச சூக்தஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்திஹோமம், வேதபாராயணம், பூர்ணாஹதி நடைப்பெற்றது. இதையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்தம் மற்றும் பால் குடத்தை  கோவில் முக்கியஸ்தர்கள் தங்கள் தலைமீது எடுத்து சென்று  கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் திருக்குட நன்னீராட்டு செய்து தீபாரதனை காட்டினார். 

பின்னர்  கலசத்திற்கு ஊற்றிய புனித நீர்  பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து   ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்ம பெருமாள் சுவாமிக்கு  பல்வேறு திரவியங்கள்,  பூக்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது, ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்ம பெருமாள் சிறப்புஅலங்காரத்தில்  பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 

இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை   ஊர் பொதுமக்கள், விழாகுழுவினர், ஊர் பொதுமக்கள் மற்றும்  குலதெய்வத்தார்கள் செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies