Type Here to Get Search Results !

காவேரி நீர் 200டிஎம்சிக்கு மேல் கடலில் வீணாக கலக்கிறது - கோ.க.மணி வேதனை.

ஓகேனக்கலில் வெள்ளப்பெருக்கு அதிகரிப்பு வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்து 85 ஆயிரம் கன அடி தண்ணீர் வினாடிக்கு திறக்கப்பட்டு கடலுக்கு வீணாக செல்கிறது. இதுவரையில் 200 டி.எம்.சி தண்ணீரும் நேற்று மட்டும் 10 டி.எம்.சி தண்ணீரும் கடலுக்கு வீணாக சென்றுள்ளது. கடலுக்கு செல்லும் உபரி நீரை தர்மபுரி காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் ஜி.கே.மணி கோரிக்கை.

காவிரியில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓகேனக்கலில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது புகைமண்டலமாய் காட்சியளிக்கிறது. 

மேட்டூர் அணை நிரம்பி வினாடிக்கு ஒரு லட்சத்து 85 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஒகேனக்கல், தரமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களுக்கு காவிரி கரையோர அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் இதுவரை 200 டி.எம்.சி தண்ணீர் கடலுக்கு வீணாக சென்றுள்ளது நேற்று மட்டும் 10டி.எம்.சி தண்ணீர் கடலுக்கு வீணாக சென்றுள்ளது. கடலுக்கு வீணாக செல்லும் உபரி நீரை தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள ஏரிகள், குளங்கள், குட்டைகள் நிரப்பும் திட்டத்தின் மூலம் மாவட்டம் பயன்பட தருமபுரி காவேரி உபரி நீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன், என தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies