அதன்படி நேற்று முன்தினம் ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 43 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. அதன்படி நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 32 ஆயிரம் கன அடியாக குறைந்தது. நீர்வரத்து குறைந்த போதிலும் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளதால் அதன் தாக்கம் ஒகேனக்கல் மெயின் அருவி வரை உள்ளது .
இதனால் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் காவிரி கரையோரப் பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்தை பிலிகுண்டுவில் உள்ள மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து கூடுவதும் குறைவதுமாக உள்ளதால் பரிசல் இயக்கவும் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து நீடிக்கிறது.
