Type Here to Get Search Results !

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 32 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரித்தது. அதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனுடைய காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.

அதன்படி நேற்று முன்தினம் ஒகேனக்கலுக்கு வினாடிக்கு 43 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. அதன்படி நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 32 ஆயிரம் கன அடியாக குறைந்தது. நீர்வரத்து குறைந்த போதிலும் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட  அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளதால் அதன் தாக்கம் ஒகேனக்கல் மெயின் அருவி வரை உள்ளது .

இதனால் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் காவிரி கரையோரப் பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்தை பிலிகுண்டுவில் உள்ள மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து கூடுவதும் குறைவதுமாக உள்ளதால் பரிசல் இயக்கவும் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து நீடிக்கிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies