இந்த லாரி தர்மபுரி வழியாக நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டு இருந்தது. தொப்பூர் கணவாய் முதல் வளைவில் சென்றபோது திடீரென லாரி சாலையில் தாறுமாறாக ஓடி, முன்னால் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசு பஸ் மீது மோதியது. பின்னர் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டிரைவர்கள், பஸ் டிரைவர், 7 பயணிகள் என 10 பேர் காயம் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசாருக்கும், சுங்கச்சாவடி ரோந்து படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து காயம் அடைந்த 10 பேரை மீட்டனர்.
பின்னர் அவர்களை சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து விபத்துக்குள்ளான லாரி மற்றும் பஸ் ஆகியவற்றை போலீசார் அப்புறப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
