Type Here to Get Search Results !

தொப்பூரில் லாரி கவிழ்ந்து விபத்து, 10பேர் காயம், 2மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சர்க்கரை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி திருச்சி மாவட்டத்திற்கு புறப்பட்டது. இந்த லாரியை அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் ராஜேந்திரன் (வயது48) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் அதே மாவட்டத்தை சேர்ந்த மாற்று டிரைவர் செந்தில்குமார் (32) உடன் வந்தார். 

இந்த லாரி தர்மபுரி வழியாக நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டு இருந்தது. தொப்பூர் கணவாய் முதல் வளைவில் சென்றபோது திடீரென லாரி சாலையில் தாறுமாறாக ஓடி, முன்னால் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசு பஸ் மீது மோதியது. பின்னர் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டிரைவர்கள், பஸ் டிரைவர், 7 பயணிகள் என 10 பேர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசாருக்கும், சுங்கச்சாவடி ரோந்து படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் விரைந்து வந்து காயம் அடைந்த 10 பேரை மீட்டனர். 

பின்னர் அவர்களை சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து விபத்துக்குள்ளான லாரி மற்றும் பஸ் ஆகியவற்றை போலீசார் அப்புறப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies