Type Here to Get Search Results !

குடும்ப பிரச்னையில் 2 குழந்தைகளுடன் தாய் கிணற்றில் விழுந்து தற்கொலை.

தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த தொட்டபாவளி காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த விவசாயி மணிகண்டன் இவரது மனைவி லட்சுமி (27) இவர்களுக்கு பிரசாந்த் (4) லதா (6மாதம்) பெண் குழந்தை இருந்தனர். 

கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் மனமுடைந்த காணப்பட்ட  லட்சுமி இன்று காலை  தனது இரு குழந்தைகளுடன் அவர்களுடைய விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த மாரண்டஅள்ளி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, 3 உடல்களை மீட்டு தர்மபுரி அரசு மருத்துமனை மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து மாரண்டஹள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையா? தற்கொலையா என விசாரணை செய்து வருகின்றனர்.

குழந்தைகளுடன் தாய் கிணற்றில் குதித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies