தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் மொரப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தாசரஅள்ளி ஊராட்சி, போடிநாயக்கன்பட்டியில் இன்று கிராம சபை கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவர் திருமதி தமிழ்ச்செல்வி ரங்கநாதன், துணைத்தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். மொரப்பூர் ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி சுமதி செங்கண்ணன் முன்னிலை வகித்தார். இதில் வேளாண்மை அலுவலர், கால்நடை மருத்துவர், வார்டு உறுப்பினர்கள், செவிலியர்கள், மகளிர் சுய உதவிக் குழு தலைவர்கள் ஒருங்கிணைப்பாளர்கள், நியாயவிலைக் கடை ஊழியர், மக்கள் நலப்பணியாளர், தாசரஅள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டனர்.
இதில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி, உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்வில் ஜெமினி, சேட்டு, மதன், அரவிந்த், சிலம்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


