Type Here to Get Search Results !

காதல்; கல்யாணம்; அடிதடி, அரூரில் பரபரப்பு.

தருமபுரி மாவட்டம் அரூரைச் சேர்ந்த நவீன்ராஜ் (21) என்பவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார், திருச்செங்கோட்டில் உள்ள வேறு தனியார் கல்லூரியில் பரமத்தி வேலூர் சேர்ந்த சந்தியா(20) என்பவர், படித்து வந்தார்.

நவீன்ராஜ் மற்றும் சந்தியா இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர், இந்நிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி நேற்று அரூரில் உள்ள முருகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டர், பின்னர் காதல் ஜோடியினர் இன்று அரூர் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பாதுகாப்பு கேட்டு வருவதை அறிந்த சந்தியாவின் குடும்பத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் காவல் நிலையம் அருகே சந்தியாவை குண்டுக்கட்டாக தூக்கிக்கொண்டு வந்து அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நவீன்ராஜ் மற்றும் சந்தியா வெவ்வேறு சமுகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சந்தியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். போலீஸ் நிலையம் முன் இரு வீட்டு பெற்றோரும் இடையே திடீர் தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies