கொரோனாவால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்நிறுவனங்களை மீட்க ரூ.50 கோடி ஒதுக்கீடு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்நிறுவனங்களை மீட்க ரூ.50 கோடி ஒதுக்கீடு.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின் போது பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உதவிட தமிழ்நாடு அரசு இரண்டு கூறுகளுடன் கோவிட் உதவி மற்றும் தொழில்முனைவோருக்கான நிவாரணத் திட்டத்தை (CARE -Covid Assistance and Roof to Entrepreneur Scheme) 2022-23 ஆம் ஆண்டில் அறிவித்து அதனை செயல்படுத்த ரூ.50 கோடியை அனுமதித்துள்ளது.

1) மானியத்துடன் இணைக்கப்பட்ட கடன் திட்டம் மற்றும் 

2) மானியத்துடன் கூடிய தொழில் நுட்ப மேம்பாடு / நவீனமயமாக்கல் திட்டம் மானியத்துடன் இணைக்கப்பட்டகடன் திட்டம் 2020-21 மற்றும் 2021-22 ல் கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டு நலிந்த தொழில்முனைவோர் தாமாகவோ அல்லது அவர்களின் சட்டப்பூர்வ வாரிசுகள் மூலமோ ஏற்கனவே உள்ள நிறுவனத்தைத் மீண்டும் நிறுவிட அல்லது புதிய நிறுவனத்தைத் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் திட்டம் மூலம் நிதி உதவி பெறலாம். 

இதற்கான திட்ட மதிப்பீடு அதிகபட்சமாக ரூ.5 கோடியாகும். தகுதியான இயந்திர தளவாடங்களுக்கான முதலீட்டில் மானியம் 25 விழுக்காடு, அதிகபட்ச வரம்பு ரூ.25 லட்சம் வரை, இத்திட்டத்தின் கீழ் பயன் பெற 55 வயதிற்குட்பட்டவராகவும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். இத்திட்டத்திற்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி கட்டாயமில்லை. 

இத்திட்டத்தின் சிறப்பம்சமாக உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமல்லாது சேவைசார்ந்த நிறுவனங்களும் பயன்பெறலாம், 2019- 2020 ஆம் ஆண்டிற்கு முன்னர். அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கிய நிறுவனங்களும் பயன்பெறலாம்.

மானியத்துடன் கூடிய தொழில்நுட்ப மேம்பாடு / நவீனமயமாக்கல் திட்டம்: கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தமது நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் / நவீனமயமாக்கல் ஆகியவற்றை மேற்கொள்ளும் பட்சத்தில் மூலதன மானியமாக இயந்திரங்களின் மதிப்பில் 25 விழுக்காடு, அதிகபட்சம் ரூ.25 லட்சத்திற்கு  உட்பட்டும் வழங்கப்படும். 

இத்திட்டம் 2022-23 நிதி ஆண்டிற்கு மட்டும் நடைமுறையில் இருக்கும், மேற்கண்ட பிரிவின் கீழ் உள்ள பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தமிழக அரசு வழங்கும் இந்த அரியவாய்ப்பை பயன்படுத்தி, பயன்பெற்று பாதிக்கப்பட்ட தொழில்கள் மீண்டும் புத்துயிர் பெறவும் கேட்டுக்கொண்டுள்ளார்கள். 

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், தருமபுரி அவர்களை தேரில் அணுகியோ அல்லது 8925533940. 8925533941 மற்றும் 8925533942 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டோ தெரிந்துகொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad