தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அஞ்சே அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பி.அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள குடியிருப்பு வீடுகள், விவசாய பயன்பாடு மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சீரான மின்சாரம் கிடைக்கும் வகையில் மின்சார வாரியம் சார்பில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது.
இதன் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மின்வாரிய தர்மபுரி கோட்ட செயற்பொறியாளர் வரதராஜன் தலைமை தாங்கினார். பென்னாகரம் கிராம உதவி பொறியாளர் வித்யா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஜி.கே மணி எம்எல்ஏ கலந்துகொண்டு டிரான்ஸ்பார்மரை தொடங்கி வைத்தார்.
இதில் பாமக மாவட்ட தலைவர் செல்வகுமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், இளைஞர் சங்கம் மாநில துணைத்தலைவர் சத்தியமூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள், மின்வாரிய பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
